பதிவு செய்த நாள்
25 மார்2012
11:48
மும்பை: சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை நிலுவையை உடனடியாக வழங்கக் கோரி, ஏர் இந்தியா விமானப் பணியாளர்கள் ஏப்ரல் 2ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
அரசு நிறுவனமான ஏர் இந்தியா, தன் பணியாளர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, நிலுவையில் உள்ள சம்பளத் தொகையை ஏப்ரல் 1ம் தேதிக்குள் வழங்கி விடுவதாக, விமான நிறுவனம் சார்பில் எழுத்து வடிவில் உறுதியளிக்க வேண்டும் என, விமானப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏர் இந்தியா ஏற்கவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மூன்று சுற்று பேச்சும் தோல்வியடைந்தது. இதையடுத்து, ஏப்ரல் 2ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, ஏர் இந்தியா தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|