பதிவு செய்த நாள்
25 மார்2012
13:04
இந்தியாவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 240 மில்லியன் டாலர் கடன் வழங்கி உதவ இருக்கிறது ஆசிய மேம்பாட்டு வங்கி. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் இணை செயலாளர் வேணு ராஜாமணி கூறுகையில், இந்தியாவில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளுக்காக ஆசிய மேம்பாட்டு வங்கி 240 மில்லியன் டாலர் கடனாக வழங்க இருக்கிறது. மத்திய அரசு, ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் ஐ.ஐ.எப்.சி.எல் வாயிலாக இந்த கடன் வழங்கப்படும். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் பீகார், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களின் சாலை விரிவாக்கம் மற்றும் குஜராத்தில் ஒரு மின் நிலையம் அமைப்பு போன்றவற்றை அமைக்க வழி வகுக்கும். இந்த கட்டமைப்பு பணிகள் பொது மற்றும் தனியார் கூட்டுடன் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|