பதிவு செய்த நாள்
25 மார்2012
23:54
புதுடில்லி:நடப்பு சென்ற 2011ம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், தோல் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனத் துறைகள் நீங்கலாக, இதர துறைகளில் 2 லட்சத்து 26 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன என, மத்திய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், 1.94 லட்சம் பேர் நேரடியாகவும், 32 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில், அதிகபட்சமாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பி.பீ.ஓ. துறைகளில், 1.09 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.இதைத் தொடர்ந்து,ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் (78 ஆயிரம் பேர்),போக்குவரத்து (34 ஆயிரம் பேர்), கைத்தறி மற்றும் விசைத்தறி (13 ஆயிரம் பேர்), நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் (10 ஆயிரம் பேர்) ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|