பதிவு செய்த நாள்
26 மார்2012
12:44
சென்னை: 2012-2013ம் ஆண்டிற்கான பட்ஜெட் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5650.48 கோடி ஒதுக்கப்பட உள்ளது; சாலை பராமரிப்பிற்கு ரூ.1040 கோடி; ஆண்டுதோறும் 1000 தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்கத் திட்டம்; பயிற்சி பெறுவோரில் 50 சதவீதத்தினர் பெண்களாக இருப்பர்; கால்நடை பராமரிப்பிற்கு ரூ.813.03 கோடி ஒதுக்கீடு; மின்னணு பயணச்சீட்டு முறை அமல்; புதிய பேருந்துகள் வாங்க ரூ.548 கோடி ஒதுக்கீடு; உணவு மானியத்திற்கு ரூ.4900 கோடி ஒதுக்கீடு; கிராமப்புறங்களில் 3844 நீர்நிலைகள் அமைக்கப்படும்; ரூ.100 கோடி செல்வில் பிளாஸ்டிக் சாலைகள் வரும் ஆண்டில் அமைக்கப்படும்; தமிழக ஆணைகளை மேம்படுத்த புதிய திட்டம்; யானை தடுப்பு, அகழிகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு; நீர்வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.3924 கோடி ஒதுக்கீடு; ரூ.200 கோடி வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டு திருப்பூரில் பொது சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட உள்ளது; கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாய கடன் வழங்க ரூ.4000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; முறையாக கடனை செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்; திருச்சியில் வர்த்தக மேம்பாட்டு காப்பீட்டு மையம்; முட்டை,பால்,இறைச்சி உற்பத்தியை பெருக்க மாநிலம் முழுவதும் முட்டை உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்; மீனவர் குடும்பத்திற்காக மீன்பிடி இல்லாத காலங்களில் நிவாரண தொகை ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கும் தொகை தொடர்ந்து மேம்படுத்தப்படும்; 1.5 லட்சம் ஏழைகளுக்கு தலா 4 வெள்ளாடுகள் வழங்கப்படும் என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|