பதிவு செய்த நாள்
28 மார்2012
00:11
புதுடில்லி,: நடப்பு சர்க்கரை பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), கூடுதலாக, 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய, மத்திய அமைச்சரவை குழு அனுமதி அளித்துள்ளது. பொது உரிமம் அடிப்படையில், இந்த 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.நடப்பு சர்க்கரை பருவத்தில், இதுவரை, 20 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 30 லட்Œம் டன் ஏற்றுமதிதற்போது, கூடுதலாக 10 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, நடப்பு பருவத்தில், மொத்த சர்க்கரை ஏற்றுமதி, 30 லட்சம் டன்னாக இருக்கும். கடந்த சர்க்கரை பருவத்தில், பொது உரிமம் அடிப்படையில், 26 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு 2011-12ம் சர்க்கரை பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாக இருக்கும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) மதிப்பீடு செய்துள்ளது. கடந்த சர்க்கரை பருவத்தில் நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.43 கோடி டன்னாக இருந்தது.அதேசமயம், மத்திய உணவு அமைச்சகத்தின் மறுமதிப்பீட்டின் படி, நடப்பு சர்க்கரை பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.52 கோடி டன்னாக இருக்கும் என்றும், முதல் மதிப்பீட்டில், இது, 2.46 கோடி டன்னாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது.மத்திய அரசு, நடப்பு சர்க்கரை பருவத்தில், ஒட்டுமொத்த அளவில், 30 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. அதிகளவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளதால், உள்நாட்டில் சர்க்கரை விலை உயர வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கரை கையிருப்புஏனெனில், உள்நாட்டில், சர்க்கரைக்கான தேவை, 2.20 கோடி டன் என்றளவில் தான் உள்ளது. ஏற்றுமதி செய்த நிலையிலும், சர்க்கரை கையிருப்பு, போதிய அளவிற்கு இருக்கும் என்ற மதிப்பீட்டால், இதன் விலை உயராது என, சர்க்கரை துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.உலகளவில், சர்க்கரை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டில், கரும்பு உற்பத்தியில் ஈடுபட்டு வரும், மாநிலங்களில், இதன் உற்பத்தி கடந்த ஆண்டை விட, நல்ல அளவில் அதிகரித்துள்ளது.நிலுவைத் தொகைகூடுதலாக, 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளதால், சர்க்கரை ஆலை நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கரும்பிற்கான, நிலுவை தொகையை உடனடியாக அளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற பிப்ரவரி 29ம் தேதி நிலவரப்படி, சர்க்கரை ஆலை நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கரும்பை கொள்முதல் செய்த வகையில், 8,450 கோடி ரூபாய் அளவிற்கு நிலுவை தொகை வைத்துள்ளன. ஏற்றுமதியின் வாயிலாக சர்க்கரை ஆலைகளுக்கு, ஒரு கிலோ சர்க்கரை விற்பனையின் மூலம் 2.50-3 ரூபாய் அளவிற்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இத்தொகையைக் கொண்டு, சர்க்கரை ஆலைகள் நிலுவை தொகையை விவசாயிகளுக்கு அளிக்க முடியும் என "இஸ்மா' அமைப்பின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.கூடுதலாக, 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு, "இஸ்மா' அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. அதேசமயம், மார்ச் மாத இறுதிக்குள் அனுமதிக்கப்பட்ட சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான், சர்க்கரை ஆலைகள், பருவம் முடிவதற்குள் அதாவது, ஏப்ரல் மாத இறுதிக்குள், அதிகளவில் மூலச் சர்க்கரையை உற்பத்தி செய்ய முடியும் என இச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|