பதிவு செய்த நாள்
30 மார்2012
00:06
புதுடில்லி:நாட்டின் செயற்கை ரப்பர் உற்பத்தி, சென்ற 2011ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 10 ஆயிரத்து 503 டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 11 சதவீதம் (9,463 டன்) அதிகமாகும் என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதே மாதங்களில்,செயற்கை ரப்பர் பயன்பாடு, 4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 35 ஆயிரத்து 865 டன்னிலிருந்து, 37 ஆயிரத்து 315 டன்னாக உயர்ந்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், மோட்டார் வாகன டயர் நிறுவனங்களுக்கான ரப்பர் பயன்பாடு, 2 சதவீதம் உயர்ந்து, 26 ஆயிரத்து 278 டன்னிலிருந்து, 26 ஆயிரத்து 915 டன்னாக அதிகரித்துள்ளது.
மேலும், செயற்கை ரப்பர் இறக்குமதி 10 சதவீதம் உயர்ந்து, 25 ஆயிரத்து 87 டன்னிலிருந்து, 27 ஆயிரத்த 557 டன்னாக அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான முதல் ஒன்பது மாதங்களில், செயற்கை ரப்பர் உற்பத்தி, 81 ஆயிரத்து 504 டன்னிலிருந்து, 82 ஆயிரத்து 481 டன்னாகவும், இதன் பயன்பாடு, 3 லட்சத்து 6 ஆயிரத்து 620 டன்னிலிருந்து, 3 லட்சத்து 18 ஆயிரத்து 18 டன்னாகவும் வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும், இதன் ஒட்டு மொத்த இறக்குமதி, 2 லட்சத்து 29 ஆயிரத்து 143 டன்னிலிருந்து, 2 லட்சத்து 46 ஆயிரத்து 290 டன்னாக அதிகரித்துள்ளது.டிசம்பர் மாதம் வரையிலுமாக, செயற்கை ரப்பர் கையிருப்பு, 46 ஆயிரத்து 610 டன்னாக உள்ளது என, ரப்பர் வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|