பதிவு செய்த நாள்
30 மார்2012
10:47
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 157.08 புள்ளிகள் அதிகரித்து 17215.69 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 44.65 புள்ளிகள் அதிகரித்து 5223.50 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று சுணக்கமாகவே இருந்தது. மாதாந்திர அடிப்படையிலான முன்பேர வர்த்தகத்தின் கணக்கு முடிப்பையொட்டி, வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. மேலும், அமெரிக்கா, எச்-1பீ விசா கட்டணத்தை உயர்த்தியதால், சர்வதேச அளவிலும் பங்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. கிரீஸ் நாடு, அதன் கடன் நெருக்கடிக்குத் தீர்வு காண, மீண்டும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது. இது குறித்த தகவலால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம், 0.9 சதவீதமும், இதர ஆசிய பங்குச் சந்தைகளில், 1 சதவீத அளவிற்கும் சரிவைக் கண்டன. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|