பதிவு செய்த நாள்
01 ஏப்2012
00:21
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான, மூன்றாவது காலாண்டில், பொதுத் துறை வங்கிகள், 31 ஆயிரத்து 688 கோடி ரூபாயை நிகலர லாபமாக பெற்றுள்ளன. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டின் இதே காலாண்டை விட, 3.06 சதவீதம் (32 ஆயிரத்து 689 கோடி ரூபாய்) குறைவு என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகள், விமானச் சேவை, தொலைத் தொடர்பு, ஜவுளி, உருக்கு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, அதிகளவில் கடன் வழங்கியுள்ளன.
இவற்றில் குறிப்பாக, விமானச் சேவை மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால், பொதுத் துறை வங்கிகளால், இந்நிறுவனங்களுக்கு வழங்கிய கடன்களை திரும்ப பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது.அதேசமயம், இதே காலாண்டுகளில் தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகளின் நிகர லாபம், 28.79 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், பொதுத் துறை வங்கிகளின் செயல்பாட்டு லாபம், 73 ஆயிரம் கோடியிலிருந்து, 83 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் சென்ற ஜனவரி 27ம் தேதி வரையிலுமாக, ஜவுளி துறைக்கு வழங்கிய மொத்த கடன், 1 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயாக உயந்துள்ளது என நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|