வெளிநாட்டு கடன் ரூ.17 லட்சம் கோடிவெளிநாட்டு கடன் ரூ.17 லட்சம் கோடி ... இந்திய சுற்றுலா துறையில் ரூ.11,111 கோடி அன்னிய முதலீடு இந்திய சுற்றுலா துறையில் ரூ.11,111 கோடி அன்னிய முதலீடு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் ரூ.31,688 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2012
00:21

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான, மூன்றாவது காலாண்டில், பொதுத் துறை வங்கிகள், 31 ஆயிரத்து 688 கோடி ரூபாயை நிகலர லாபமாக பெற்றுள்ளன. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டின் இதே காலாண்டை விட, 3.06 சதவீதம் (32 ஆயிரத்து 689 கோடி ரூபாய்) குறைவு என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகள், விமானச் சேவை, தொலைத் தொடர்பு, ஜவுளி, உருக்கு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, அதிகளவில் கடன் வழங்கியுள்ளன.
இவற்றில் குறிப்பாக, விமானச் சேவை மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால், பொதுத் துறை வங்கிகளால், இந்நிறுவனங்களுக்கு வழங்கிய கடன்களை திரும்ப பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது.அதேசமயம், இதே காலாண்டுகளில் தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகளின் நிகர லாபம், 28.79 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், பொதுத் துறை வங்கிகளின் செயல்பாட்டு லாபம், 73 ஆயிரம் கோடியிலிருந்து, 83 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் சென்ற ஜனவரி 27ம் தேதி வரையிலுமாக, ஜவுளி துறைக்கு வழங்கிய மொத்த கடன், 1 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயாக உயந்துள்ளது என நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)