வெளிநாட்டு கடன் ரூ.17 லட்சம் கோடிவெளிநாட்டு கடன் ரூ.17 லட்சம் கோடி ... அன்னியச் செலாவணி கையிருப்பு:ரூ.14.75 லட்சம் கோடியாக உயர்வு அன்னியச் செலாவணி கையிருப்பு:ரூ.14.75 லட்சம் கோடியாக உயர்வு ...
இந்திய சுற்றுலா துறையில் ரூ.11,111 கோடி அன்னிய முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2012
00:23

புதுடில்லி:இந்தியாவில், சுற்றுலா துறையில், 46 மாதங்களில் 11 ஆயிரத்து 111 கோடி ரூபாய் அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என, மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டில், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலாத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அன்னிய முதலீடு சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதன்மூலம், பல்லாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த 2008-09ம் நிதியாண்டில், ஓட்டல் மற்றும் சுற்றுலா துறையில், 2,098 கோடி ரூபாய் மதிப்பிலான, 489 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 2009-10ம் நிதியாண்டில், 3,566 கோடி ரூபாய் முதலீட்டில், 582 திட்டங்களுக்கும், கடந்த 2010-11ம் நிதியாண்டில், 1,405 கோடி ரூபாய் முதலீட்டில், 403 திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், சுற்றுலாத் துறையில், மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 4,041 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பு 2011ம் ஆண்டு ஜனவரி வரையிலான 46 மாதத்தில், சுற்றுலாத் துறையில், 1,901 அன்னிய நேரடி திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 11 ஆயிரத்து 111 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என, மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)