பதிவு செய்த நாள்
01 ஏப்2012
00:23
புதுடில்லி:இந்தியாவில், சுற்றுலா துறையில், 46 மாதங்களில் 11 ஆயிரத்து 111 கோடி ரூபாய் அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என, மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டில், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலாத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அன்னிய முதலீடு சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதன்மூலம், பல்லாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த 2008-09ம் நிதியாண்டில், ஓட்டல் மற்றும் சுற்றுலா துறையில், 2,098 கோடி ரூபாய் மதிப்பிலான, 489 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 2009-10ம் நிதியாண்டில், 3,566 கோடி ரூபாய் முதலீட்டில், 582 திட்டங்களுக்கும், கடந்த 2010-11ம் நிதியாண்டில், 1,405 கோடி ரூபாய் முதலீட்டில், 403 திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், சுற்றுலாத் துறையில், மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 4,041 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பு 2011ம் ஆண்டு ஜனவரி வரையிலான 46 மாதத்தில், சுற்றுலாத் துறையில், 1,901 அன்னிய நேரடி திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 11 ஆயிரத்து 111 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என, மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|