சென்ற நிதியாண்டில் 6,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைக்கு அனுமதிசென்ற நிதியாண்டில் 6,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைக்கு அனுமதி ... மின் தடையால் "ஸ்கூல் பேக்' தயாரிப்பு பாதிப்பு மின் தடையால் "ஸ்கூல் பேக்' தயாரிப்பு பாதிப்பு ...
நறுமணப் பொருட்கள் பூங்காவால் சிவகங்கையில் ரூ.20 கோடி விரயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2012
00:15

சிவகங்கை:சிவகங்கையில் அடிக்கல் நாட்டி, 4 ஆண்டுகளாகியும் 100 கோடி ரூபாய் செலவிலான "நறுமணப் பொருட்கள் பூங்கா' திட்டம் செயல்படாமல் முடங்கியுள்ளது.மாவட்டத்தில் நெல், கரும்பு மற்றும் தானிய பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் நடவு செய்கின்றனர். இத்துடன் மஞ்சள், கிராம்பு, ஏலம், மிளகாய் போன்ற பணப்பயிர்களை உற்பத்தி செய்து, அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காக, சிவகங் கையில் "நறுமணப் பொருட்கள் பூங்கா' என்ற சந்தை அமைக்கத் திட்டமிடப்பட்டது.
இதற்காக,கொட்டகுடி ஊராட்சி, மானாகுடி ரோட்டில் 75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மத்திய அமைச்சர் சிதம்பரம் இப்பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். 20 கோடி ரூபாயில் குடோன், ஏற்றுமதியாளர் அறை, "ஸ்பைசஸ்' வாரிய அலுவலகம், நறுமணப் பொருட்கள் தயாரிப்பு நிலைய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதற்கு பின், 100 கோடிரூபாயில் மஞ்சள், மிளகாய், ஏலம், மிளகை சந்தைப் படுத்துதல், "ஸ்பைசஸ் வாரியம்' மூலம் நறுமணப் பொருட்களை பொடியாக்கி, பாக்கெட்களாக தயாரித்து ஏற்றுமதி செய்ய, வாரியம் திட்டமிட்டுள்ளது. ஆனால், 20 கோடி ரூபாயில் நடக்கும் கட்டுமான பணிகளே, கடந்த நான்கு ஆண்டுகளாக இழுபறியாக நடந்து வருகிறது. இதனால், பூங்கா திறக்கும் திட்டம் சிவகங்கையில் முடங்கிக் கிடக்கிறது.இது குறித்து "ஸ்பைசஸ்' வாரிய உதவி இயக்குனர் (வர்த்தகம்) நிதின்ஜோ கூறியதாவது:
கட்டுமான பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன. விரைவில் இப்பூங்காவிற்கு மின்இணைப்பு பெறப்பட்டு, ஜூனில் செயல்பாட்டிற்கு வரும். நறுமணப் பொருட்களை சந்தைப்படுத்த, 40 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளோம். ஒவ்வொரு வியாபாரிக்கும் ஒரு ஏக்கர் நிலம், ஆண்டிற்கு 1,000 ரூபாய்க்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும். நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியானால், ஈரோடு போல் சிவகங்கை பூங்காவும் பெரிய நறுமணப் பொருள்கள் சந்தையாக உருவெடுக்கும், என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)