மின் தடையால் "ஸ்கூல் பேக்' தயாரிப்பு பாதிப்புமின் தடையால் "ஸ்கூல் பேக்' தயாரிப்பு பாதிப்பு ... உரம் இறக்குமதி 7 சதவீதம் குறைந்தது உரம் இறக்குமதி 7 சதவீதம் குறைந்தது ...
வர்த்தகம் » ஜவுளி
ஏற்றுமதி ஜவுளித் தொழில் 60 சதவீதம் வீழ்ச்சி மாற்றுத் தொழிலை நாடிச் செல்லும் அவலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2012
00:18

ஈரோடு:மின் வெட்டு, நூலிழை உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை உயர்வு, மத்திய பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில், இரண்டு ஆண்டுகளில் 60 சதவீதம் வரை நசிவடைந்துள்ளதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு முன், 400க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கின. இதில், 30 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், ஒரு லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றனர். ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் வரை ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்தது. தற்போது, நூலிழை விலை உயர்வு, மின்தடை, பிளீச்சிங், டையிங், பிரின்டிங் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், ஜவுளி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஈரோடு ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலர் சிவானந்தம் கூறியதாவது:
ஈரோடு, சென்னிமலை, பெருந்துறை, விஜயமங்கலம், பவானி உள்ளிட்ட பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கின. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜவுளித் தொழில் பல்வேறு பிரச்னைகளால் நலிவடைந்துள்ளது.ஏற்றுமதியாளர்கள் ஆயத்த ஆடை தயாரிப்பு ஆர்டர் பெற்ற சில நாட்களிலேயே நூலிழை விலை உயர்ந்து விடுகிறது. தவிர, ஏற்றுமதி செய்யும்போது, ரூபாயின் வெளிமதிப்பில் ஏற்படும் மாற்றத்தால், பெரும் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர். மாவட்டத்தில், 400 ஆக இருந்த ஏற்றுமதி நிறுவனங்கள், 160 ஆக குறைந்து விட்டன. 60 சதவீதம் பேர், மாற்றுத்தொழிலைத் தேடிச் சென்று விட்டனர்.
ஏற்றுமதியாளர்களாக இருந்தவர்கள் சிலர், உள்ளூர் ஆடை ரகங்களைத் தயாரித்து, சந்தையில் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் கட்டட கட்டுமான ஒப்பந்ததாரர்களாகவும், ஜல்லி, கிரஷர் மணல், சிமென்ட் விற்பனைத் தொழிலுக்கும் மாறிவிட்டனர்.இதை தவிர்க்க, பருத்தியை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)