பதிவு செய்த நாள்
06 ஏப்2012
09:33
புதுடில்லி:தொழிலாளர் சேமநல நிதிக்கான வட்டி வீதம், 2012-13ம் நிதியாண்டில், 8.6 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.இது தொடர்பாக, தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் (இ.பி.எப்.ஓ.,), மத்திய அறக்கட்டளை வாரிய உறுப்பினர் சச்தேவ் கூறியதாவது:தொழிலாளர் சேமநல நிதிக்கான வட்டி வீதம், கடந்த 2010-11ம் நிதியாண்டில், 9.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த நிதியாண்டிற்கு (2011-12) வட்டி வீதம், 8.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இதற்கு பார்லிமென்டிற்கு உள்ளேயும், வெளியேயும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால், இந்த நிதியாண்டில், (2012-13) தொழிலாளர் சேமநல நிதிக்கான வட்டி வீதத்தை, 8.6 சதவீதமாக நிர்ணயிக்க, தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு தீர்மானித்துள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக பேசி முடிவெடுக்க, தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|