பதிவு செய்த நாள்
10 ஏப்2012
23:58
புதுடில்லி: -நாடு தழுவிய அளவில், தொடர்ந்து இழப்பைக் கண்டு வரும் பொதுத் துறை வங்கி கிளைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் கிளைகளை மூட அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.மத்திய அரசு, உள்நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொதுத்துறை வங்கிகள் கிளை கள் தொடங்க அனுமதி வழங்கி யுள்ளது. வருவாய் இழப்புஅதேசமயம், பொதுத் துறையைச் சேர்ந்த வங்கிகளின் பல கிளைகளும், காப்பீட்டு நிறுவனங்களின் கிளைகளும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால், அரசின் முதலீட்டிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், வங்கிகளின் வசூலாகாத கடனும் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, இது போன்ற கிளைகளை மூடிவிட திட்டமிட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சகத்தின் செயலர் (நிதி சேவைகள்) டீ.கே.மிட்டல், இந்திய தொழிலக கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.உள்நாட்டில், பொதுத் துறை வங்கிகள் அனைத்திற்குமாக, 87 ஆயிரம் கிளைகள் உள்ளன. இதில், பல கிளைகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இது போன்ற கிளைகளில், வசூலாகாத கடன் அதிகரிப்பதுடன், ஒட்டு மொத்த அளவில், வங்கிகளின் செயல்பாடும் பாதிப்புக்குள்ளாகிறது. மேலும், அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது.குறிக்@காள்பொதுவாக, பொதுமக்களுக்கு அதிகளவில் சேவை அளிக்க வேண்டும் என்பதற்காகவே கிளைகள் திறக்கப்படுகின்றன. இருப்பினும், இக்கிளைகள் லாபத்துடன் செயல்பட வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாகும். அரசின் இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த திட்டமில்லை என்றாலும், மேலும், 12 மாதங்களுக்கு இதே நிலை நீடிக்கும்பட்சத்தில், இழப்பைக் கண்டுவரும் கிளைகளை மூடுவது குறித்து மறுபரீசிலனை செய்யப்படும் என மிட்டல் தெரிவித்தார்.கிராமங்கள்அதேசமயம், வங்கி கிளைகளே இல்லாத கிராமப்புறங்களில், கிளைகள் தொடங்குவதில் கடுமை காட்டப்படமாட்டாது. முதல் கட்டமாக, நகர்ப்புறங்களில் தொடர்ந்து இழப்பைக் கண்டு வரும் கிளைகளை மூடுவது குறித்தே அரசு முடிவெடுக்க உள்ளது.மத்திய அரசு, அண்மையில், பொதுத் துறையில் மிகப் பெரிய வங்கியாகத் திகழும், பாரத ஸ்டேட் வங்கிக்கு 7,900 கோடி ரூபாயை மூலதனமாக அளித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் அமைத்திருந்த குழு பாரத ஸ்டேட் வங்கியின் விரிவாக்கம் மற்றும் மூலதன இருப்பு விகித நெறிமுறைகளை மேம்படுத்திக் கொள்ள, 3 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என அறிக்கை தாக்கல் செய்துள்ளது.தொழில்நுட்பம்வங்கி கிளைகள் இல்லாத இடங்களில், நவீன தொழில்நுட்பம் மற்றும் வங்கி பணியாளர்களின் உதவியுடன் பொதுமக்களுக்கு வங்கிச் சேவை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வகையில், நாடு தழுவிய அளவில், வங்கி கிளைகள் இல்லாத 73 ஆயிரம் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளுக்கு, வங்கிச் சேவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் உள்ள மொத்த கிராமங்களில், 6 லட்சம் கிராமங்களில் மட்டுமே வங்கிச் சேவைகள் வழங்கப்படுகின்றன.எனவே, வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் கிளைகள் குறித்து, ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இது போன்ற கிளைகளை மூடுவது, அல்லது இக்கிளைகளை வேறு இடத்திற்கு மாற்றுவது அல்லது கிளைகளில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.வசூலாகாத கடன்கடந்த 2011ம் ஆண்டு, டிசம்பர் இறுதி வரையிலுமாக, இந்தியாவில் செயல்படும் அனைத்து வங்கிகளின் வசூலாகாத கடன், 1 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன், 1 லட்சத்து 3 ஆயிரம் கோடியாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் வரையிலுமாக, பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன், 68 ஆயிரத்து 597 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2011ம் ஆண்டு டிசம்பர் வரையிலுமாக, 51 சதவீத்திற்கும் மேல் அதிகரித்து 1 லட்சத்து 3 ஆயிரத்து 891 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மிட்டல் மேலும் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|