பதிவு செய்த நாள்
10 ஏப்2012
23:58
மும்பை: -நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்றும் மந்தமாகவே இருந்தது. அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்த புள்ளிவிவரத்தால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் தொடர்ந்து சுணக்கமாக காணப்பட்டது. இருப்பினும், மதியத்திற்கு பிறகு, சில்லரை முதலீட்டாளர்கள் ஓர் அளவிற்கு பங்குகளை வாங்கியதையடுத்து, மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்ததுநேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர் பொருட்கள், மோட்டார் வாகனம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. ஆனால், எண்ணெய், எரிவாயு பொறியியல், தகவல் தொழில்நுட்பம், உலோகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும்போது, 21.70 புள்ளிகள் அதிகரித்து, 17,243.84 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக 17,274.69 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,135.76 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 18 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 18 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 9.20 புள்ளிகள் உயர்ந்து, 5,243.60 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே, அதிகபட்சமாக 5,255.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,211.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|