பதிவு செய்த நாள்
11 ஏப்2012
10:22
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 150.63 புள்ளிகள் குறைந்து 17093.21 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 49.20 புள்ளிகள் குறைந்து 5194.40 புள்ளிகளோடு காணப் பட்டது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர் பொருட்கள், மோட்டார் வாகனம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. ஆனால், எண்ணெய், எரிவாயு பொறியியல், தகவல் தொழில்நுட்பம், உலோகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. வர்த்தக நேர தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா குறைந்துள்ளது. இன்று ஒரு டாலரின் மதிப்பு 51.60 ஆக உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|