பதிவு செய்த நாள்
16 ஏப்2012
23:49
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பாண்டில், பருத்தி கையிருப்பு போதுமான அளவிற்கு இருக்குமென்பதால், கூடுதலாக 25 லட்சம் பருத்தி பொதிகளை (ஒரு பொதி-170 கிலோ) ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டுமென மத்திய வேளாண் அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.உற்பத்திநடப்பு 2011-12ம் பருத்தி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்),கடந்த ஆண்டை விட, பருத்தி உற்பத்தி சிறப்பாக அதிகரித்துள்ளது. நடப்பு பருவத்தில் இதன் உற்பத்தி 3.50 கோடி பொதிகளாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கூடுதலாக, 20 லட்சம் பருத்தி பொதிகள் உற்பத்தியாகும் என்பதால், அதன் விலை சரிவடைந்துள்ளது. அரசு, ஒரு குவிண்டால் பருத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 3,300 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. ஆனால், வெளிச் சந்தையில் பருத்தி விலை, இதை விட குறைவாகவே உள்ளது.நடப்பு பருவத்தில் மத்திய அரசு, 1.25 கோடி பருத்தி பொதிகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சென்ற மார்ச் நிலவரப்படி 94 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பருவம் முடிவதற்குள், பருத்தி ஏற்றுமதி, இலக்கை விஞ்சி விடும் என்பதாலும், உள்நாட்டில் பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற கணிப்பினாலும், பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு ஜவுளி துறை ஆதரவளித்த போதிலும், விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும், தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.இதையேற்று, பருத்தி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மட்டுமே, அனுமதிக்கப்பட்ட அளவுகளில் பருத்தியை ஏற்றுமதி செய்யலாம் என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்தது.இந்நிலையில், பருத்தி ஏற்றுமதிக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை தளர்த்தி, முழுமையான ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என, மத்திய வேளாண் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.தற்போது, இந்த அனுமதி வழங்கப்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி அளவான 1.25 கோடி பருத்தி பொதிகளுடன் கூடுதலாக, 25 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும், எஞ்சிய பருத்தி பொதிகளை உள்நாட்டு தேவைக்கும், அடுத்த ஆண்டு கையிருப்பிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொள்முதல்இந்நிலையில், மத்திய அரசு, வரும் மே மாதம் முதல் 25 லட்சம் பருத்தி பொதிகளை கொள்முதல் செய்து இருப்பில் வைக்குமாறு, பருத்தி கழகத்திடம் தெரிவித்துள்ளது.பருத்தி ஏற்றுமதி மீதான தடை முற்றிலும் நீக்கப்படுமா, இப்பிரச்னை தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சர் சரத்பாருக்கும், வர்த்தகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கும் இடையிலான பனிப்போர் முடிவிற்கு வருமா என்பது இனிதான் தெரியவரும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|