ரப்பர் உற்பத்தி 9 லட்சம் டன் ரப்பர் உற்பத்தி 9 லட்சம் டன் ... நாட்டின் கப்பல் கட்டும் துறை ரூ. 9,200 கோடியாக வளர்ச்சி காணும் நாட்டின் கப்பல் கட்டும் துறை ரூ. 9,200 கோடியாக வளர்ச்சி காணும் ...
கூடுதலாக 25 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்ய கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2012
23:49

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பாண்டில், பருத்தி கையிருப்பு போதுமான அளவிற்கு இருக்குமென்பதால், கூடுதலாக 25 லட்சம் பருத்தி பொதிகளை (ஒரு பொதி-170 கிலோ) ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டுமென மத்திய வேளாண் அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.உற்பத்திநடப்பு 2011-12ம் பருத்தி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்),கடந்த ஆண்டை விட, பருத்தி உற்பத்தி சிறப்பாக அதிகரித்துள்ளது. நடப்பு பருவத்தில் இதன் உற்பத்தி 3.50 கோடி பொதிகளாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கூடுதலாக, 20 லட்சம் பருத்தி பொதிகள் உற்பத்தியாகும் என்பதால், அதன் விலை சரிவடைந்துள்ளது. அரசு, ஒரு குவிண்டால் பருத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 3,300 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. ஆனால், வெளிச் சந்தையில் பருத்தி விலை, இதை விட குறைவாகவே உள்ளது.நடப்பு பருவத்தில் மத்திய அரசு, 1.25 கோடி பருத்தி பொதிகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சென்ற மார்ச் நிலவரப்படி 94 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பருவம் முடிவதற்குள், பருத்தி ஏற்றுமதி, இலக்கை விஞ்சி விடும் என்பதாலும், உள்நாட்டில் பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற கணிப்பினாலும், பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு ஜவுளி துறை ஆதரவளித்த போதிலும், விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும், தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.இதையேற்று, பருத்தி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மட்டுமே, அனுமதிக்கப்பட்ட அளவுகளில் பருத்தியை ஏற்றுமதி செய்யலாம் என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்தது.இந்நிலையில், பருத்தி ஏற்றுமதிக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை தளர்த்தி, முழுமையான ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என, மத்திய வேளாண் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.தற்போது, இந்த அனுமதி வழங்கப்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி அளவான 1.25 கோடி பருத்தி பொதிகளுடன் கூடுதலாக, 25 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும், எஞ்சிய பருத்தி பொதிகளை உள்நாட்டு தேவைக்கும், அடுத்த ஆண்டு கையிருப்பிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொள்முதல்இந்நிலையில், மத்திய அரசு, வரும் மே மாதம் முதல் 25 லட்சம் பருத்தி பொதிகளை கொள்முதல் செய்து இருப்பில் வைக்குமாறு, பருத்தி கழகத்திடம் தெரிவித்துள்ளது.பருத்தி ஏற்றுமதி மீதான தடை முற்றிலும் நீக்கப்படுமா, இப்பிரச்னை தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சர் சரத்பாருக்கும், வர்த்தகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கும் இடையிலான பனிப்போர் முடிவிற்கு வருமா என்பது இனிதான் தெரியவரும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)