தானிய உற்பத்தி 25.26 கோடி டன்னாக உயரும்தானிய உற்பத்தி 25.26 கோடி டன்னாக உயரும் ... இந்திய பங்குகளில் ஏப்ரல் வரையிலுமாக... அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.44,000 கோடி முதலீடு இந்திய பங்குகளில் ஏப்ரல் வரையிலுமாக... அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.44,000 கோடி ... ...
ரயில்வே கையாண்ட சரக்கு 98 கோடி டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2012
00:53

புதுடில்லி:சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்திய ரயில்வே கையாண்ட சரக்குகள், 97.78 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலக்கரி, சிமென்ட், உணவு தானியங்கள், இரும்புத் தாது, உருக்கு போன்ற சரக்குகள், பல்வேறு மாநிலங்களுக்கு, சரக்கு ரயில்கள் வாயிலாக கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த நிதியாண்டில், 99.30 கோடி டன் சரக்குகள் கையாள்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின், இந்த இலக்கு, 97 கோடி டன்னாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்ற நிதியாண்டில், ரயில்வே கையாண்ட சரக்குகள், 97.78 கோடி டன்னாக அதிகரித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில் கையாளப்பட்ட சரக்குகளை விட, 5 சதவீதம் (92.15 கோடி டன்) உயர்வாகும்.இந்தியாவில், 17 ரயில்வே மண்டலங்கள் செயல்பட்டாலும், நான்கு மண்டலங்களில் மட்டுமே, 10 கோடி டன் அளவிற்கு சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. குறிப்பாக, பிலாஸ்பூர் நகரை மையமாகக் கொண்ட, தென் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில், 15 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
மதிப்பீட்டு காலத்தில், ரயில்வே கையாண்ட மொத்த சரக்குகளில், நிலக்கரியின் பங்களிப்பு மட்டும், 45-46 சதவீதம் என்றளவில் உள்ளது. இரும்புத் தாதுவும் அதிகளவில் கையாளப்பட்டுள்ளது என, அந்த அறிக்கையில் @மலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)