பதிவு செய்த நாள்
25 ஏப்2012
00:54
புதுடில்லி:கடந்த 2010-11ம் நிதியாண்டில், 26.90 லட்சம் டன் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டதாக, மத்திய உணவு துறை இணையமைச்சர் கே.வி.தாமஸ் பார்லிமென்டில் தெரிவித்தார்.தேவையை விட, உற்பத்தி குறைந்ததால், பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த நிதியாண்டில், உள்நாட்டில், பருப்பு வகைகளுக்கான தேவை, 1.88 கோடி டன்னாக இருந்தது.
அதேசமயம், அவ்வண்டில், பருப்பு வகைகள் உற்பத்தி, 1.82 கோடி டன் என்றளவில்தான் இருந்தது. எனவே, தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதி மேற்கொள்ளப்பட்டது. நடப்பு 2011-12ம் பருவத்தில் (ஜூலை-ஜூன்), உள்நாட்டில் பருப்பு வகைகள் உற்பத்தி, 1.70 கோடி டன்னாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நடப்பாண்டிலும், பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என, அமைச்சர் மேலும் கூறினார். பருப்பு உற்பத்திக்கும், தேவைக்கும் உள்ள இடைவெளியை கருத்தில் கொண்டு, உளுந்து மற்றும் துவரம்பருப்பு மீதான முன்பேர வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|