கடந்த நிதியாண்டில் 5.36 லட்சம் டன் பாக்கு உற்பத்தி கடந்த நிதியாண்டில் 5.36 லட்சம் டன் பாக்கு உற்பத்தி ... டாபே நிறுவனத்திற்கு விருது டாபே நிறுவனத்திற்கு விருது ...
சுந்தரம் ஹோம் பைனான்ஸ் ரூ. 2,500 கோடி கடன் வழங்க இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2012
00:05

சென்னை: சுந்தரம் பீ.என்.பி. பரிபாஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம், வீட்டு கடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில், வீட்டு வசதிக்கு, 2,500 கோடி ரூபாய்
கடன் வழங்க திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஆச்சார்யா கூறியதாவது:சென்ற 2011-12ம் நிதியாண்டில், நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பான
அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம், 94 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 47 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. இதே
நிதியாண்டுகளில், நிறுவனம், வழங்கிய கடன்கள், 61 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,210 கோடியிலிருந்து, 1,948 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நிறுவனத்தின் நிகர வசூலாகாத கடன், 0.09
சதவீதத்திலிருந்து, 0.06 சதவீதமாக மிகவும் குறைந்துள்ளது.நிறுவனத்திற்கு, நாடு தழுவிய அளவில், 75 அலுவலகங்கள் உள்ளன. நடப்பு நிதியாண்டில், கூடுதலாக, 25 புதிய அலுவலகங்கள்
திறக்கப்பட உள்ளன. இதில், 20 கிளைகள், நடுத்தர மற்றும் சிறிய நகரங்களில் திறக்கப்படும்.சுந்தரம் பீ.என்.பி. பரிபாஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில், சுந்தரம் பைனான்ஸ், 50.1 சதவீத
அளவிற்கும், பீ.என்.பி.பரிபாஸ், 49.9 சதவீத அளவிற்கும் பங்கு மூலதனத்தை கொண்டுள்ளன. கடந்த நிதியாண்டில் மட்டும், புதிதாக, 10 ஆயிரம் @பருக்கு வீட்டு வசதிக்கு கடன்
வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 36 ஆயிரம் என்றளவில் உள்ளது. இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)