பதிவு செய்த நாள்
27 ஏப்2012
00:05
சென்னை: சுந்தரம் பீ.என்.பி. பரிபாஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம், வீட்டு கடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில், வீட்டு வசதிக்கு, 2,500 கோடி ரூபாய்
கடன் வழங்க திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஆச்சார்யா கூறியதாவது:சென்ற 2011-12ம் நிதியாண்டில், நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பான
அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம், 94 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 47 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. இதே
நிதியாண்டுகளில், நிறுவனம், வழங்கிய கடன்கள், 61 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,210 கோடியிலிருந்து, 1,948 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நிறுவனத்தின் நிகர வசூலாகாத கடன், 0.09
சதவீதத்திலிருந்து, 0.06 சதவீதமாக மிகவும் குறைந்துள்ளது.நிறுவனத்திற்கு, நாடு தழுவிய அளவில், 75 அலுவலகங்கள் உள்ளன. நடப்பு நிதியாண்டில், கூடுதலாக, 25 புதிய அலுவலகங்கள்
திறக்கப்பட உள்ளன. இதில், 20 கிளைகள், நடுத்தர மற்றும் சிறிய நகரங்களில் திறக்கப்படும்.சுந்தரம் பீ.என்.பி. பரிபாஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில், சுந்தரம் பைனான்ஸ், 50.1 சதவீத
அளவிற்கும், பீ.என்.பி.பரிபாஸ், 49.9 சதவீத அளவிற்கும் பங்கு மூலதனத்தை கொண்டுள்ளன. கடந்த நிதியாண்டில் மட்டும், புதிதாக, 10 ஆயிரம் @பருக்கு வீட்டு வசதிக்கு கடன்
வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 36 ஆயிரம் என்றளவில் உள்ளது. இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|