கச்சா எண்ணெயை சேமிக்க கிடங்கு கட்டுவதில் தீவிரம்: - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - கச்சா எண்ணெயை சேமிக்க கிடங்கு கட்டுவதில் தீவிரம்: - பிசினஸ் ஸ்டாண்டர்ட் ... ... சோயா பயிரிடும் பரப்பளவு 10 சதவீதம் அதிகரிக்கும் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - சோயா பயிரிடும் பரப்பளவு 10 சதவீதம் அதிகரிக்கும் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் ... ...
தூத்துக்குடி துறைமுகம்: நிகர லாபம் ரூ.102 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2012
00:09

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் கடந்த நிதியாண்டில்(2011-2012), 102.03 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக, அதன் தலைவர் சுப்பையா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: கடந்த நிதியாண்டில், இத்துறைமுகம் 281.05 லட்சம் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் கையாளப்பட்ட, 251.30 லட்சம் டன்
சரக்குகளைவிட, 9.24 சதவீதம் அதிகமாகும். மேலும், இது, மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை (260 லட்சம் டன்) விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.சரக்கு
பெட்டகங்கள்மதிப்பீட்டு காலத்தில், சரக்கு பெட்டகங்களை கையாள்வது 2 சதவீதம் வளர்ச்சி கண்டு 4,77,096 ஆக உயர்ந்துள்ளது. கையாளப்பட்ட சரக்கு கப்பல்களின் எண்ணிக்கை 1,490.
சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் 10.18 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு இறக்குமதி 195.49 லட்சம் டன்னாகவும், ஏற்றுமதி 85.56 லட்சம் டன்னாகவும் இருந்தது.கடந்த நிதியாண்டில்,
துறைமுக வரலாற்றில் இரண்டாவது முறையாக, நிகர லாபம், 100 கோடியை தாண்டி 102.03 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சரக்கை கையாளும் வளர்ச்சி விகிதத்தில், இத்துறைமுகம்
இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் மூன்றாவது இடத்திலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சி சரக்கை கையாண்டதில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.வளர்ச்சி பணிகள்
துறைமுகத்திற்கு இழுவைக் கப்பல், பளுதூக்கி போன்றவை வாங்கப்பட்டு, கடலை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்மூலம்,
இத்துறைமுகம் 2014-2015ம் நிதியாண்டில், 5 கோடி டன் சரக்குகளை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சுப்பையா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)