பதிவு செய்த நாள்
27 ஏப்2012
00:09
தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் கடந்த நிதியாண்டில்(2011-2012), 102.03 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக, அதன் தலைவர் சுப்பையா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: கடந்த நிதியாண்டில், இத்துறைமுகம் 281.05 லட்சம் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் கையாளப்பட்ட, 251.30 லட்சம் டன்
சரக்குகளைவிட, 9.24 சதவீதம் அதிகமாகும். மேலும், இது, மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை (260 லட்சம் டன்) விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.சரக்கு
பெட்டகங்கள்மதிப்பீட்டு காலத்தில், சரக்கு பெட்டகங்களை கையாள்வது 2 சதவீதம் வளர்ச்சி கண்டு 4,77,096 ஆக உயர்ந்துள்ளது. கையாளப்பட்ட சரக்கு கப்பல்களின் எண்ணிக்கை 1,490.
சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் 10.18 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு இறக்குமதி 195.49 லட்சம் டன்னாகவும், ஏற்றுமதி 85.56 லட்சம் டன்னாகவும் இருந்தது.கடந்த நிதியாண்டில்,
துறைமுக வரலாற்றில் இரண்டாவது முறையாக, நிகர லாபம், 100 கோடியை தாண்டி 102.03 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சரக்கை கையாளும் வளர்ச்சி விகிதத்தில், இத்துறைமுகம்
இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் மூன்றாவது இடத்திலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சி சரக்கை கையாண்டதில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.வளர்ச்சி பணிகள்
துறைமுகத்திற்கு இழுவைக் கப்பல், பளுதூக்கி போன்றவை வாங்கப்பட்டு, கடலை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்மூலம்,
இத்துறைமுகம் 2014-2015ம் நிதியாண்டில், 5 கோடி டன் சரக்குகளை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சுப்பையா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|