பதிவு செய்த நாள்
27 ஏப்2012
12:03
கீழக்கரை: ராமநாதபுர மாவட்டம் முத்துப்பேட்டையில், கன்னியாகுமரி மீனவர்கள் முகாமிட்டு, சீலா (வஞ்சிரம்) மீன்களை, ஏராளமாக பிடித்து வருகின்றனர். மற்ற மீன் பாடு குறைந்த நிலையில், இந்த மீன்களின் விலை, "கிடுகிடு' வென உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் அருகே கீழக்கரை, வாலிநோக்கம், முத்துப்பேட்டை கடல் பகுதியில் பிடிபடும் சீலா மீன்கள் மிகவும் ருசி உடையவை. இப்பகுதி மொத்த வியாபாரிகள், கன்னியாகுமரி மீனவர்களை, ஒப்பந்த அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த மீனவர்கள், முத்துப்பேட்டையில் முகாமிட்டு, 40 கடல் மைல் வரை சென்று, சீலா மீன்களை பிடித்து வருகின்றனர். இவர்களின் வலையில், ஏராளமான சீலா மீன்கள் சிக்கி வருகின்றன. கடந்தாண்டு, கிலோ, 260 ரூபாய்க்கு விற்ற இந்த மீன்கள், தற்போது, 450 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. விலை பற்றி கவலைப்படாத மீன் பிரியர்கள், கடற்கரைக்கு வந்தே, சொல்லும் விலைக்கு மீன்களை வாங்கி செல்வதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|