பதிவு செய்த நாள்
29 ஏப்2012
12:00
புதுடில்லி : கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மாருதி சுசூகியின் நிகரலாபம் 28 சதவீதம் சரிவை சந்தித்து இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான மாருதி சுசூகி 2011-12ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த நிறுவனம் பெற்ற நிகர லாபம் ரூ. 1,635 கோடியாகும். கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 28 சதவீதம் குறைவாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவே மிகக் குறைந்த லாபம். அதேபோல் கடந்த நிதி ஆண்டு 11,33,695 கார்களை விற்பனை செய்து இருக்கிறது மாருதி. இது கடந்த 2010-2011 நிதியாண்டின் விற்பனையைக் காட்டிலும் இது 10 சதவீதம் குறைவாகும். அந்த ஆண்டு 12.71 லட்சம் கார்கள் விற்பனையாயின.
நிதிநிலை வெளியிட்ட பின்னர் மாருதி நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ஷின்சோ நாகானிஷி கூறியதாவது, கடந்த நிதி ஆண்டு ஆட்டோமொபைல் தொழிலுக்கு சவால்கள் மிகுந்த வருடமாக இருந்தது. பண வீக்கம், பெட்ரோல் விலை உயர்வு ஆகியவை கார்களின் விற்பனையைப் பெரிதும் பாதித்தன. அதிலும் சிறு கார் ரகங்களின் விற்பனைதான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளானது. மேலும் பலரும் டீசல் ரக கார்களை அதிகம் நாட ஆரம்பித்துவிட்டனர். எனவே இந்த வகை கார்களை அதிகம் தர மாருதி முடிவெடுத்து இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் முதலீட்டாளர்களுக்கு 2011-2012 ஆண்டுக்கான டிவிடெண்ட் 150 சதவீதமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|