பதிவு செய்த நாள்
29 ஏப்2012
14:16
ஆக்சிஸ் வங்கியின் நிகர லாபம் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியாக மாறிவரும் ஆக்சிஸ் வங்கி, தனது நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மார்ச் மாதம் முடிவடைந்த 4வது காலாண்டு நிதியாண்டில் ரூ.1,277 கோடி லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் அந்தவங்கியின் லாபம் ரூ.1,020.11 கோடியாக இருந்தது. இதன்மூலம் இந்த காலாண்டில் 20.3 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளது. மேலும் மார்ச் மாதம் முடிவடைந்த 2011-12ம் நிதியாண்டில் ரூ.4,242 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2010-11-ஆம் நிதி ஆண்டில் ரூ.3,388 கோடியாக இருந்தது. ஆக, முழு நிதி ஆண்டில் லாபம் 25 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே ஆண்டுகளில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.27,415 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் பங்கு முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 160 சதவீத டிவிடெண்டு வழங்கவும் ஆக்சிஸ் முடிவு செய்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|