பதிவு செய்த நாள்
02 மே2012
00:16
சென்னை:பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், உள்நாடு மற்றும் என்.ஆர்.ஓ. டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இதன்படி, 50 லட்ச ரூபாய் வரையில், 7 முதல் 90 நாட்கள் வரை மேற்கொள்ளும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம், 7 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கு, 7.75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி 7.50 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கு, 8.25 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 1 ஆண்டு முதல் 2 ஆண்டிற்குள் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம், 9.25 சதவீதமாகவும், மூத்தகுடிமக்களுக்கு, 10 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.50 லட்ச ரூபாய் வரையில் மேற்கொள்ளப்படும் ஏனைய குறித்த கால டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை என, இவ்வங்கியின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|