பதிவு செய்த நாள்
02 மே2012
23:55
சென்னை,: உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், ஆச்சி மசாலா நிறுவனத்திற்கு, சிறந்த தர கட்டுப்பாட்டிற்கான "சிறு தொழில் 2012' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைவர்ஏ.டீ.பத்மசிங் ஐசக் கூறியதாவது:உணவுப் பொருட்கள் தயாரிப்பில், சர்வதேச அளவில் கடைபிடிக்கப்பட்டு வரும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருட்களின் தன்மைகள் ஆகியவை, நிறுவனத்தின் தொழிற்சாலைகள் அனைத்திலும் கடைபிடிக்கப்படுகிறது.நிறுவனத்தின், 150 வகையான உணவுப் பொருட்கள், வாடிக்கையாளர்களின் வாங்கும் வசதிக்கேற்ப, பல்வேறு அளவுகளிலும், குறைவான விலையிலும் கிடைக்கச் செய்வதே, நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. இதை ஊக்கப்படுத்தும் வகையிலும், அங்கீகரிக்கும் வகையிலும், இந்த விருது கிடைத்துள்ளது. இவ்வாறு பத்மசிங் ஐசக் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|