பதிவு செய்த நாள்
04 மே2012
01:03
சென்னை:நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், கடலூர் அருகே அமைத்து வரும் சுத்திகரிப்பு ஆலையின் விரிவாக்கத் திட்டத்திற்காக, 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.சுத்திகரிப்பு ஆலை:ஐதராபாத்தை சேர்ந்த நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துடன் (டிட்கோ) இணைந்து, கடலூரில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை அமைத்து வருகிறது.
இது, தமிழ்நாட்டில், தனியார் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய முதலீடாகும். முதற்கட்டமாக, 9,660 கோடி ரூபாய் செலவில், 60 லட்சம் டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட பிரிவை அமைக்கும் பணி முடிவடையும் கட்டத்தில் உள்ளது.இதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக, இவ்வாலையில் எண்ணெய் சுத்திகரிப்பு திறனை 1.50 கோடி டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த விரிவாக்க திட்டம், வரும் 2014 ஆண்டு துவங்கப்பட உள்ளது.
இப்பணிகள் வரும் 2016ம் ஆண்டு முடிவடைந்து, உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில், பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் துறையில் முதன் முதலாக மிகப் பெரிய முதலீட்டை ஈர்த்த பிராந்தியமாக கடலூர் மற்றும் நாகப்பட்டினம் திகழும்.
கட்டமைப்பு வசதிகள்:இதையொட்டி, இங்கு சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக, 13 ஆயிரத்து 354 கோடி ரூபாய் முதலீட்டிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இப்பிராந்தியம்,தொழில் வளர்ச்சி பெறுவதன் மூலம், அடுத்த பத்தாண்டுகளில், 92 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 7.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|