பதிவு செய்த நாள்
04 மே2012
01:04
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்காவில், சென்ற ஏப்ரல் மாதத்தில், கடந்த ஏழு மாதத்தில் இல்லாத அளவாக, தனியார் துறையில் வேலை வாய்ப்பு சரிவடைந்துள்ளது என்ற செய்தியின் தாக்கத்தால், நேற்று இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது.
இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததாலும், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. ஐரோப்பிய மத்திய வங்கி, பழைய வட்டி விகிதமே தொடரும் என்று அறிவித்ததையடுத்தும், கடன்பத்திரங்களுக்கான தொகையை திரும்ப செலுத்த ஸ்பெயின் நாடு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாலும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 53.42 ஆக சரிவடைந்து போனது. பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததாலும், இறக்குமதியாளர்கள் அதிகளவில் டாலரை வாங்கியதாலும் ரூபாயின் மதிப்பு சரிவடைந்தது என செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கி, உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
இருப்பினும், தகவல் தொழில்நுட்பம், மருந்து உள்ளிட்ட ஒரு சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 150.72 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,151.19 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,271.77 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,120.86 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 23 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 7 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 50.75 புள்ளிகள் சரிவடைந்து, 5,188.40 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,217.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,180.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|