பதிவு செய்த நாள்
10 மே2012
00:02
புதுடில்லி: நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-2017), நாட்டில், கூடுதலாக 80 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக, மத்திய மின் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ராஜ்யசபாவில் தெரிவித்தார்.கடந்த 10வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், கூடுதலாக, 42 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், கூடுதலாக 21 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அளவிற்கே திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.இதேபோன்று, அண்மையில் நிறைவுற்ற 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-2012), கூடுதலாக, 78 ஆயிரத்து 775 மெகாவாட் மின் உற்பத்தி திட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இது, மறுமதிப்பீட்டில், 62 ஆயிரம் மெகாவாட்டாக குறைக்கப்பட்டது. ஆனால், 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், கூடுதலாக 55 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அளவிற்கே திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.தற்போதைய நிலையில், உள்நாட்டில், 1 லட்சத்து 94 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|