பதிவு செய்த நாள்
10 மே2012
00:08
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையன்றும் சரிவைச் சந்தித்தது. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி மற்றும் கிரீஸ் நாட்டில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பு உள்ளிட்டவற்றால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், மின்சாரம், உலோகம், வங்கி, சிமென்ட், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது. இருப்பினும், நுகர்ப்பொருட்கள், தகவல் தொழில்நுட்ப துறையயைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 66.60 புள்ளிகள் சரிவடைந்து, 16,479.58 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,615.74 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,422.93 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 25.15 புள்ளிகள் குறைந்து, 4,974.80 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,016.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,956.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|