பதிவு செய்த நாள்
12 மே2012
00:26
சென்னை:முருகப்பா குழுமம், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து இக்குழுமத்தின் செயல் தலைவர் ஏ.வெள்ளையன் கூறியதாவது:
சென்ற 2011-12ம் நிதியாண்டில், குழுமத்தின் நிகர லாபம், 1,304 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 1,182 கோடி ரூபாயாக இருந்தது. இதே நிதியாண்டுகளில், குழுமத்தின் விற்பனை, 31 சதவீதம் வளர்ச்சி கண்டு, 22 ஆயிரத்து
314 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே நிதியாண்டுகளில், குழுமத்தின், செயல்பாட்டு லாபம், 20 சதவீதம் வளர்ச்சியடைந்து, 2,692 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய் திட்ட செலவில், விரிவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், பொறியியல் மற்றும் உர வர்த்தகத்தில், அதிகளவில் முதலீடு மேற்கொள்ளப்படும். இவ்வாறு வெள்ளையன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|