பதிவு செய்த நாள்
12 மே2012
00:31
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையன்றும் கடும் சரிவை சந்தித்தது. சென்ற மார்ச் மாதத்தில், தொழில்துறை உற்பத்தி, 3.2 சதவீதம் என்றளவில் பின்னடைவை கண்டுள்ளது என்ற செய்தி வெளியானது. இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததும் பங்கு வர்த்தகம் மேலும் வலுவிழக்கச் செய்தது. ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடி மற்றும் சீனாவில், சென்ற ஏப்ரலில், இறக்குமதி, ஏற்றுமதி நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலை போன்றவற்றால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளிலும் பங்கு வர்த்தகம் சுணக்கமாக இருந்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ஆரோக்ய பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பம்,பொறியியல், உலோகம், நுகர் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மோட்டார் வாகனம், வங்கி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 127.07 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 16,292.98 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,447.24 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,233.76 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 36.80 புள்ளிகள் குறைந்து, 4,928.90 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,976.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,906.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|