பதிவு செய்த நாள்
13 மே2012
11:05
காரைக்குடி: கோடையில் செட்டிநாடு காட்டன் சேலைக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. ஆனால், தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் நெசவாளர்கள் திணறிவருகின்றனர்.
காரைக்குடியில் உற்பத்தியாகும் செட்டிநாடு காட்டன் சேலைகளுக்கு நல்ல மவுசு உண்டு. இங்கு உற்பத்தியாகும் சேலைகள் டில்லி, மும்பை, கோல்கட்டாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு "எம்பிராய்டரிங்' உள்ளிட்ட அலங்கார பணிகள் இந்த சேலைகளுக்கு நடக்கிறது. அதன்பின், வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். இங்கு, துவக்கத்தில் 3000க்கும் மேற்பட்ட கைத்தறிகள், காரைக்குடி, காளவாய் பொட்டல், சத்தியமூர்த்தி நகர், கோவிலூர் பகுதிகளில் இருந்தன. தற்போது 650 கைத்தறிகள் மட்டுமே இயங்குகின்றன. மாதந்தோறும் ஒரு கோடி ரூபாய்க்கு சேலைகள் உற்பத்தியாகின்றன. உற்பத்தி செய்து பல ஆண்டுகளானாலும் இந்த சேலைகள் பழமை மாறாமல் காணப்படும். கோடை காலங்களில் இவற்றை உடுத்தினால், உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதனால், தற்போது செட்டிநாடு காட்டன் சேலைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. பாதிப்பு: : ஆனால், தற்போது காரைக்குடி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையாலும், கைத்தறிகளின் எண்ணிக்கை குறைவாலும், கடைக்காரர்கள் கேட்கும் ஆர்டரை கொடுக்கமுடியாத நிலை உள்ளது. இது தவிர, மாதந்தோறும் நூல்களின் விலை 30- 50 ரூபாய் வரை உயர்கிறது. இதனால், உற்பத்தியில் தேக்கம் ஏற்படுகிறது. கைத்தறி நெசவாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: செட்டிநாடு காட்டன் சேலை உற்பத்தியை பெருக்க, அரசு தடையின்றி மின்சாரம் வழங்கவேண்டும். நூல்களின் விலையையும் கட்டுக்குள் வைத்தால் தான் தேவையான சேலைகளை உற்பத்தி செய்ய முடியும், என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|