பதிவு செய்த நாள்
13 மே2012
16:23
புதுடில்லி : உலகளவில் இந்திய கைவினை பொருட்களுக்கு மவுசு அதிகம். கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய கைவினை பொருட்களின் ஏற்றுமதி 11 சதவீதம் உயர்ந்து 227 மில்லியன் டாலருக்கு வளர்ச்சி பெற்றுள்ளதாக கைவினைப்பொருட்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வாரியத்தின் முதன்மை இயக்குநர் ராகேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கைவினை பொருட்களின் ஏற்றுமதி 204 மில்லியன் டாலராக இருந்ததாகவும், இந்தாண்டு அது 11 சதவீதம் உயர்ந்து 227 மில்லியன் டாலராக இருக்கிறது. சீனா, லத்தின் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் புதிதாக உருவாகி இருக்கும் சந்தைகளால் இந்திய கைவினை பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்து இருப்பதாகவும், இந்த நிதியாண்டில் 3.2 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மொராதாபாத், ஜெய்ப்பூர், ஜோத்பூர், நர்சப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தான் அதிகளவு கைவினை பொருட்கள் உற்பத்தியாகின்றது. இந்த தொழில் மட்டும் சுமார் 1 மில்லியன் பேர் ஈடுபட்டு இருக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|