பதிவு செய்த நாள்
14 மே2012
00:18
புதுடில்லி:வரும், 2014ம் ஆண்டில், நாட்டின் மொபைல்போன்களின் சந்தை மதிப்பு, 54 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, இந்திய செல்லுலார் கூட்டமைப்பு (ஐ.சி.ஏ.) மதிப்பிட்டுள்ளது.சென்ற 2011ம் ஆண்டில், மொபைல் சாதனங்களுக்கான தேவை, 18 கோடியாக அதிகரித்தது. இது, இதற்கு முந்தைய 2010ம் ஆண்டை விட, 20 சதவீதம் (15 கோடி சாதனங்கள்) அதிகமாகும். இதே ஆண்டுகளில், மொபைல் சாதன சந்தை மதிப்பு, 11 சதவீதம் வளர்ச்சிகண்டு, 34 ஆயிரத்து 500 கோடியிலிருந்து, 38 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டில், மொபைல் சாதனங்களுக்கான தேவை, கடந்த ஆண்டை விட 11 சதவீதம் உயர்ந்து, 20 கோடியாகவும், இதன் சந்தை மதிப்பு, 13 சதவீதம் அதிகரித்து, 43 ஆயிரம் கோடி ரூபாயாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில், இதற்கான தேவை, 22.50 கோடியிலிருந்து, 25 கோடி என்ற எண்ணிக்கையிலும், சந்தை மதிப்பு 48 ஆயிரத்து 200 கோடி ரூபாயிலிருந்து, 54 ஆயிரம் கோடி ரூபாயாகவும் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|