பதிவு செய்த நாள்
21 மே2012
00:10
பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், மார்ச்சுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், 1,224 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 11.7 சதவீதம் (1,386 கோடி ரூபாய்) குறைவாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின், தனிப்பட்ட வருவாய் 157 கோடியிலிருந்து, 154 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்நிறுவனம், 8,065 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 4,696 கோடி ரூபாயாக இருந்தது.நான்காவது காலாண்டில், இந்நிறுவனம் செலுத்திய வரி, 123 கோடியிலிருந்து, 259 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே, இந்நிறுவனத்தின் நிகர லாபம் சரிவடைந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், 46.80 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை அடைவதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நர்சிங் ராவ் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|