பதிவு செய்த நாள்
21 மே2012
00:15
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி., நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், விரிவாக்கம் மற்றும் பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களுக்காக 20 ஆயிரத்து 900 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அருப் ராய் சவுத்ரி தெரிவித்தார்.இந்நிறுவனம், கடந்த 2011-12ம் நிதியாண்டில், மின் உற்பத்தி திட்டங்களுக்காக 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. தற்போது, இந்நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 37 ஆயிரத்து 514 மெகாவாட்டாக உள்ளது. இதனை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிறுவனம், அனல் மின் திட்டங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என, சவுத்ரி மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|