பதிவு செய்த நாள்
21 மே2012
00:20
மும்பை:சென்ற 2011-12ம் நிதியாண்டில், வங்கி காசோலைகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை மதிப்பு, 98 லட்சத்து 90 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதே சமயம், இதே நிதியாண்டில், மின்னணு வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை மதிப்பு, 22 லட்சம் கோடியாக உள்ளது.பண பரிவர்த்தனை:ரிசர்வ் வங்கி, காசோலைகளின் பரிமாற்றத்தை குறைத்து, மின்னணு வாயிலான பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. இதனால், ஆண்டுக்காண்டு, ஆன்-லைன் எனப்படும் மின்னணு வாயிலான பண பரிவர்த்தனை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. அதே சமயம், காசோலை மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனை குறைந்து வருகிறது.
உதாரணமாக, சென்ற 2011-12ம் நிதியாண்டில், ஆன்-லைன் வாயிலான பண பரிவர்த்தனை, முந்தைய நிதியாண்டை விட, அளவின் அடிப்படையில், 27.7 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில், 70 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.இதே காலத்தில், காசோலை பயன்பாடு, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் தலா 3 சதவீதம் குறைந்துள்ளது.
பரிமாற்றங்கள்:சென்ற நிதியாண்டில், 116 கோடிக்கும் அதிகமாக கிரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் ஆன்-லைன் (இ.சி.எஸ் மற்றும் என்.இ.எப்.டி.,) மூலம் பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, காசோலை வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்களை (134 கோடி) விட குறைவாகும்.
கடந்த 2003-04 மற்றும் 2011-12ம் நிதியாண்டுகளில், ஆன்-லைன் வாயிலான பண பரிவர்த்தனை, அளவின் அடிப்படையில் 10 மடங்கும், மதிப்பின் அடிப்படையில் 4 மடங்கும் வளர்ச்சி கண்டுள்ளது.இதே காலத்தில், காசோலை வாயிலான பரிவர்த்தனை, அளவின் அடிப்படையில் 31 சதவீதமாக குறைந்த அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அதே சமயம், மதிப்பின் அடிப்படையிலான வளர்ச்சி 15 சதவீதம் குறைந்துள்ளது.சென்ற நிதியாண்டில், ஆன்-லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பண பரிமாற்றங்களில், தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை (என்.இ.எப்.டி) பெரும் பங்கை வகிக்கிறது. இவ்வகையிலான பரிவர்த்தனை, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், முறையே 71 சதவீதம் மற்றும் 91 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
அதே சமயம், இதே காலத்தில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மின்னணு பரிவர்த்தனை சேவைகள் (ஈ.சி.எஸ்), அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், முறையே 4.4 சதவீதம் மற்றும் 4.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
மதிப்பு : ஆன்-லைன் வாயிலான பரிவர்த்தனையில், மிக அதிக அளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. கிரெடிட் கார்டுகள் வாயிலான பரிவர்த்தனை, சென்ற நிதியாண்டில் அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், முறையே 20.6 சதவீதம் மற்றும் 27.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற நிதியாண்டில், நாட்டில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 3.2 சதவீதம் குறைந்துள்ளது. இந்த நிலையிலும், கிரெடிட் கார்டு வாயிலான ஆன்-லைன் பரிவர்த்தனை, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி:அதே சமயம், டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை, சென்ற நிதியாண்டில் 22.1 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆன்-லைன் பரிவர்த்தனை, அளவின் அடிப்படையில் 38.1 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 38 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.வரும் ஆண்டுகளில் காசோலைகளின் பயன்பாடு மெல்லக் குறைந்து, மின்னணு வாயிலான பணப்பரிவர்த்தனை சிறப்பாக வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|