என்.டி.பி.சி., நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீட்டு திட்டம் என்.டி.பி.சி., நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீட்டு திட்டம் ... ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரணாப் முகர்ஜி கவலை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரணாப் முகர்ஜி கவலை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடந்த 2011-12ம் நிதியாண்டில்...வங்கி காசோலை பரிவர்த்தனை ரூ.98 லட்சம் கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2012
00:20

மும்பை:சென்ற 2011-12ம் நிதியாண்டில், வங்கி காசோலைகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை மதிப்பு, 98 லட்சத்து 90 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதே சமயம், இதே நிதியாண்டில், மின்னணு வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை மதிப்பு, 22 லட்சம் கோடியாக உள்ளது.பண பரிவர்த்தனை:ரிசர்வ் வங்கி, காசோலைகளின் பரிமாற்றத்தை குறைத்து, மின்னணு வாயிலான பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. இதனால், ஆண்டுக்காண்டு, ஆன்-லைன் எனப்படும் மின்னணு வாயிலான பண பரிவர்த்தனை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. அதே சமயம், காசோலை மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனை குறைந்து வருகிறது.
உதாரணமாக, சென்ற 2011-12ம் நிதியாண்டில், ஆன்-லைன் வாயிலான பண பரிவர்த்தனை, முந்தைய நிதியாண்டை விட, அளவின் அடிப்படையில், 27.7 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில், 70 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.இதே காலத்தில், காசோலை பயன்பாடு, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் தலா 3 சதவீதம் குறைந்துள்ளது.
பரிமாற்றங்கள்:சென்ற நிதியாண்டில், 116 கோடிக்கும் அதிகமாக கிரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் ஆன்-லைன் (இ.சி.எஸ் மற்றும் என்.இ.எப்.டி.,) மூலம் பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, காசோலை வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்களை (134 கோடி) விட குறைவாகும்.
கடந்த 2003-04 மற்றும் 2011-12ம் நிதியாண்டுகளில், ஆன்-லைன் வாயிலான பண பரிவர்த்தனை, அளவின் அடிப்படையில் 10 மடங்கும், மதிப்பின் அடிப்படையில் 4 மடங்கும் வளர்ச்சி கண்டுள்ளது.இதே காலத்தில், காசோலை வாயிலான பரிவர்த்தனை, அளவின் அடிப்படையில் 31 சதவீதமாக குறைந்த அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அதே சமயம், மதிப்பின் அடிப்படையிலான வளர்ச்சி 15 சதவீதம் குறைந்துள்ளது.சென்ற நிதியாண்டில், ஆன்-லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பண பரிமாற்றங்களில், தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை (என்.இ.எப்.டி) பெரும் பங்கை வகிக்கிறது. இவ்வகையிலான பரிவர்த்தனை, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், முறையே 71 சதவீதம் மற்றும் 91 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
அதே சமயம், இதே காலத்தில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மின்னணு பரிவர்த்தனை சேவைகள் (ஈ.சி.எஸ்), அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், முறையே 4.4 சதவீதம் மற்றும் 4.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
மதிப்பு : ஆன்-லைன் வாயிலான பரிவர்த்தனையில், மிக அதிக அளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. கிரெடிட் கார்டுகள் வாயிலான பரிவர்த்தனை, சென்ற நிதியாண்டில் அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், முறையே 20.6 சதவீதம் மற்றும் 27.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற நிதியாண்டில், நாட்டில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 3.2 சதவீதம் குறைந்துள்ளது. இந்த நிலையிலும், கிரெடிட் கார்டு வாயிலான ஆன்-லைன் பரிவர்த்தனை, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி:அதே சமயம், டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை, சென்ற நிதியாண்டில் 22.1 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆன்-லைன் பரிவர்த்தனை, அளவின் அடிப்படையில் 38.1 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 38 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.வரும் ஆண்டுகளில் காசோலைகளின் பயன்பாடு மெல்லக் குறைந்து, மின்னணு வாயிலான பணப்பரிவர்த்தனை சிறப்பாக வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)