பதிவு செய்த நாள்
28 மே2012
00:55
நாமக்கல்:டீசல் விலையை உயர்த்தினால், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையின் விவரம்:பெட்ரோலிய எரிபொருட்களான டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகியவற்றை, பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்கள் வினியோகித்து வருகின்றன.
இதில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள், தமிழகத்தில் செயற்கையாக, டீசல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, சீரான எரிபொருள் வினியோகத்தை நிறுத்தி உள்ளன. இதனால், வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், உள்ளூரில் இயக்கக்கூடிய லாரி உரிமையாளர்கள், டீசலுக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கான சூழல் நிலவுவதாக தெரியவந்துள்ளது.
இதை, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. செயற்கையாக, எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் இந்நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.டீசல் விலை உயர்த்தப்பட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கும் சூழல் உருவாகும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|