பதிவு செய்த நாள்
29 மே2012
00:19
புதுடில்லி:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதை அடுத்து, சுற்றுலா காப்பீட்டிற்கான பிரிமியத்தை உயர்த்த பொது காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதற்கு அனுமதி வேண்டி, இந்நிறுவனங்கள் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் (இரிடா) கோரிக்கை விடுக்க உள்ளன.
பொது காப்பீட்டு நிறுவனங்கள், சுற்றுலா காப்பீட்டிற்கான பிரிமியத்தை, காப்பீட்டுதாரரிடம் இருந்து ரூபாய் மதிப்பில் பெற்றுக் கொள்கின்றன. ஆனால், அயல்நாடுகளில், சுற்றுலா பயணம் மேற்கொள்ளும், காப்பீட்டுதாரருக்கான இழப்பீட்டை, இந்நிறுவனங்கள் டாலரில் தான் வழங்குகின்றன.சென்ற நிதியாண்டில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு 10 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்துள்ளது.
நடப்பாண்டு, இதுவரை ரூபாயின் வெளிமதிப்பு 5 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.இதனால், அயல்நாட்டு சுற்றுலாவிற்கான காப்பீட்டு தொகையை விட, கூடுதல் தொகையை (ரூபாய் மதிப்பிலான டாலராக), பொது காப்பீட்டு நிறுவனங்கள் தர வேண்டி உள்ளது.இந்த இழப்பை ஈடு செய்யும் விதத்தில், காப்பீட்டு பிரிமியக் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்குமாறு இரிடா விடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக, பொதுக் காப்பீட்டு நிறுவன உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|