பதிவு செய்த நாள்
29 மே2012
00:21
மும்பை:பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஒ.சி.), சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், 12 ஆயிரத்து 670 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, மூன்று மடங்கு (3,905 கோடி ரூபாய்) அதிகமாகும். இந்நிறுவனம், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களை, மத்திய அரசு, நிர்ணயித்துள்ள விலையில் விற்பனை செய்கிறது.
இதனால், ஏற்படும் இழப்பை, மத்திய அரசு, மானியமாக அளித்ததை அடுத்து, நிகர லாபம் உயர்ந்துள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசிடமிருந்து, இந்நிறுவனம், 45 ஆயிரத்து 484 கோடி ரூபாயை மானியமாக பெற்றுள்ளது.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் விற்பனை, 30 சதவீதம் அதிகரித்து, 98 ஆயிரத்து 482 கோடியிலிருந்து, 1 லட்சத்து 28 ஆயிரத்து 444 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்நிறுவனம், சென்ற நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, பங்கு ஒன்றிற்கு 5 ரூபாய் டிவிடெண்டு வழங்க முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|