பதிவு செய்த நாள்
30 மே2012
23:54
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்.பி.சி.எல்.,) சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், 4,631 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 312.5 சதவீதம் (1,123 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் வருவாய், 32 சதவீதம் வளர்ச்சிகண்டு, 39 ஆயிரத்து 667 கோடியிலிருந்து, 52 ஆயிரத்து 394 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில், இந்நிறுவனம், 911 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 1,539 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது.இந்நிறுவனம், சென்ற நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, 85 சதவீத டிவிடெண்டு அறிவித்துள்ளது. இதன்படி, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட, பங்கு ஒன்றிற்கு, 8.50 ரூபாய் டிவிடெண்டு கிடைக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|