பருத்தி சாகுபடி பரப்பு 10 சதவீதம் குறையும்பருத்தி சாகுபடி பரப்பு 10 சதவீதம் குறையும் ... தேவை குறைந்ததால் மிளகாய் வற்றல் விலை சரிவு தேவை குறைந்ததால் மிளகாய் வற்றல் விலை சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உணவு சாரா வங்கி கடன் 16.7 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
00:54

மும்பை:இந்திய வங்கிகள், சென்ற மே மாதம், 18ம் தேதி வரையிலான, காலத்தில், உணவு சாரா துறைக்கு வழங்கிய கடன், 16.7 சதவீதம் அதிகரித்து, 45 லட்சத்து 42 ஆயிரத்து 870 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் இதுவரையிலுமாக, வங்கிகள் வழங்கிய மொத்தக் கடன் அளவு, 71 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், வழங்கப்பட்ட தொகையை விட, சற்று குறைவாகும்.டெபாசிட்:சென்ற மே மாதம், 18ம் தேதி வரையிலான காலத்தில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், கடந்த நிதியாண்டின் இதே காலம் வரையில், திரட்டப்பட்ட தொகையை விட, 13.8 சதவீதம் என்ற குறைந்தளவில் வளர்ச்சிகண்டு, 60 லட்சத்து 58 ஆயிரத்து 294 கோடி ரூபாயாக இருந்தது.
அதேசமயம், நடப்பு 2012-13ம் நிதியாண்டின் துவக்கம் வரையிலுமாக, வங்கிகள் திரட்டிய டெபாசிட், முந்தைய நிதியாண்டின் துவக்கத்தில், இருந்ததை விட, 1 சதவீதம் அல்லது, 54 ஆயிரம் கோடி என்றளவில், சற்று குறைந்திருந்தது.
கடந்த @ம மாதம் 18ம் @ததி வரையிலான பத்து, 15 தினங்களில், வங்கிகள் வழங்கிய கடன், 16 சதவீதம் என்றளவில் உயர்ந்திருந்தது. அதேசமயம், சென்ற 2011-12ம் நிதியாண்டின், கடைசி, 15 தினங்களில், வங்கிகள் வழங்கிய கடன் 18 Œதவீதம் என்றளவில் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி:நடப்பாண்டு ஏப்ரல் மாதம், 17ம் தேதி, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான, "ரெப்போ ரேட்' விகிதங்களை, 0.50 சதவீதம் குறைத்தது. இதையடுத்து, பல வங்கிகள், அவற்றின், அடிப்படை வட்டி விகிதங்களை, 0.15 சதவீதம் முதல் 0.25 சதவீதம் வரை குறைத்தன.
இதையடுத்து, பல வங்கிகளின் அடிப்படை வட்டி விகிதம், தற்போது, 10.50 சதவீதம் என்றளவில் உள்ளது. இருப்பினும், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஒரு சில தனியார் துறை வங்கிகள், அடிப்படை வட்டி விகிதத்தை, மேற்கண்ட அளவை விட, சற்று குறைத்துள்ன.
ரெப்போ ரேட்:நடப்பு நிதியாண்டில், வங்கிகள் வழங்கும் கடன் அளவு, 17 சதவீதம் என்றளவிலும், திரட்டப்படும் டெபாசிட், 16 சதவீதம் என்றளவிலும் இருக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், "ரெப்போ ரேட்' விகிதங்கள், குறைக்கப்பட்டுள்ளதால், பல வங்கிகள் வழங்கும் கடன் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ஒட்டுமொத்த அளவில், வங்கிகள் வழங்கும் கடன், ரிசர்வ் வங்கி, நிர்ணயித்துள்ள கடன் அளவை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது என, வங்கித் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
தனியார் துறையைச் சேர்ந்த பெடரல் பேங்க் நிறுவனத்தின் கடன் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 20-22 சதவீத அளவிற்கு இருக்கும் என தெரிகிறது. இதேபோன்று, பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆப் பரோடா வங்கியின், கடன் வளர்ச்சி, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள, 17 சதவீதத்தை விட, கூடுதலாக 1-2 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
@வளாண் கடன்:இந்நிலையில், பொதுத் துறையைச் சேர்ந்த தேனா வங்கியின், கடன் வளர்ச்சி, நடப்பாண்டில், 22 சதவீதம் என்றளவிலும், திரட்டப்படும் டெபாசிட் அளவு, 20 சதவீதம் என்றளவிலும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வங்கியின், மொத்தக் கடனில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சில்லறை மற்றும் வேளாண் கடன்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என தெரிகிறது.நடப்பு நிதியாண்டில், இந்திய வங்கிகளின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பல வங்கிகள், அவற்றின் கிளைகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. இதனால், வழங்கப்படும் கடன் மற்றும் திரட்டப்படும் டெபாசிட் அளவு, கடந்த நிதியாண்டை விட, அதிகரிக்கும் என தெரிகிறது.பேங்க் ஆப் இந்தியாவின், கடன் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 18 சதவீதம் என்றளவிலும், திரட்டப்படும் டெபாசிட், 16-17 சதவீதம் என்றளவிலும் இருக்கும் என இவ்வங்கி தெரிவித்துள்ளது.
நிதியுதவி:நாட்டின் பணவீக்கம் அதிகரித்ததை அடுத்து, வங்கிகளுக்கான வட்டி விகிதம், முன்பு அதிகரிக்கப்பட்டது. இதனால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமும் உயர்ந்தது.
இதையடுத்து, தொழில் துறை நிறுவனங்கள், வங்கிகளிடமிருந்து, கடன் வாங்குவது குறைந்து போனதுடன், பல நிறுவனங்களால், கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்த முடியாத நிலை உருவானது. இதன் காரணமாக, வங்கிகளின் வசூலாகாத கடனும் உயர்ந்தது. இது, ஒட்டுமொத்த வங்கித் துறையின் வளர்ச்சியைப் பாதித்தது.தற்போது, கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், நிறுவனங்கள், வங்கிகளிடமிருந்து பெறும், நிதி உதவி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நடப்பு முழு நிதியாண்டில், வங்கிகள் வழங்கும் கடன் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)