பதிவு செய்த நாள்
06 ஜூன்2012
09:45
மும்பை : இந்தியாவில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் புதிய கொள்கையை மத்திய நேற்று அறிவித்ததையடுத்து வாரத்தின் மூன்றாவது நாளில்(06.06.12) 170 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கிய மும்பை பங்குசந்தை 12 மணிக்கு பிறகு சூடு பிடிக்க தொடங்கியது. தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்த பங்குசந்தை மதியம் 2மணியளவில் 400 புள்ளிகள் ஏற்றத்துடன் காணப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு தேசிய பங்குசந்தையின் நிப்டி குறியீட்டு எண் 5000 புள்ளிகளை தொட்டு இருக்கிறது.மதியம் 3 மணியளவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 458.99 புள்ளிகள் உயர்ந்து 16,479.63-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 145.25 புள்ளிகள் உயர்ந்து 5008.25 ஆகவும் காணப்பட்டது.
இந்திய பங்குசந்தையை கணக்கிட உதவும் 30 முன்னணி பங்குகளின் விலையும் முன்னேற்றத்துடன் காணப்பட்டது. அதேப்போல் வங்கி, ஆட்டோமொபைல் மற்றும் இதர நிறுவன பங்குகள் விலையும் சற்று முன்னேற்றத்துடன் காணப்பட்டது. இந்திய பங்குசந்தையை போல ஆசிய பங்குசந்தைகளான ஜப்பான் மற்றும் ஹாங்காங் பங்குசந்தைகளும் உயர்வுடன் துவங்கி இருக்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|