பதிவு செய்த நாள்
06 ஜூன்2012
15:28
புதுடில்லி : தங்களது வாடிக்கையாளர்கள் எளிதில் போன் மூலமாக இணையதளங்களை பயன்படுத்த ஒபெரா நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் போட்டு இருக்கிறது ஏர்டெல் நிறுவனம்.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 253 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்புது வசதிகளையும், தொழில்நுட்பங்களையும் புகுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுக்க செல்போன் மூலம் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதையடுத்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதை எளிமைப்படுத்தி கொடுக்கும் வகையில் புதிதாக ஒபெரா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறது. செல்போன்களில் ஒபெரா பிரவுசரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால் இந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறது ஏர்டெல் நிறுவனம். விரைவில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய பிரவுசரை ஒபெரா உருவாக்கி தர இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|