மின் துறைக்கு 60 சதவீத நிலக்கரி: கோல் இந்தியா ஒப்புதல்மின் துறைக்கு 60 சதவீத நிலக்கரி: கோல் இந்தியா ஒப்புதல் ... உலகளவில் நடப்பு ஆண்டில்...இயற்கை ரப்பர் உற்பத்தி வளர்ச்சி குறையும் உலகளவில் நடப்பு ஆண்டில்...இயற்கை ரப்பர் உற்பத்தி வளர்ச்சி குறையும் ...
நெல்லுக்கான ஆதரவு விலையை உயர்த்தமத்திய உணவு அமைச்சகம் எதிர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2012
01:05

புதுடில்லி:கடந்த வாரம், மத்திய வேளாண் அமைச்சகம், வரும் 2012-13ம் வேளாண் பருவத்தில், ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை,நடப்பாண்டை விட,15 சதவீதம் அதிகரித்து,1,250ரூபாயாக உயர் த்த வேண்டும் என, பரிந்துரை செய்தது. இதற்கு, மத்திய உணவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மானிய சுமை:நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்தால், அது அரசின் மானியச் சுமையை மேலும் அதிகரித்து விடும். எனவே, நடப்புப் பருவத்திற்கு வழங்கப்பட்ட அதே அளவிற்கே, நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கப்பட வேண்டும் என, உணவு அமைச்சகம்தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், வேளாண் துறை, ஒரு குவிண்டால் உயர்வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, 1,280 ரூபாயாகவும், சாதாரண வகை நெல்லுக்கான விலையை,1,250 ரூபாயாகவும் உயர்த்தும் வகையில்,பரிந்துரை செய் திருந்தது.நடப்பு பருவத்தில், ஒரு குவிண்டால் உயர்வகை நெல்லுக்கான ஆதரவு விலை,1,110 ரூபாயாகவும், சாதாரண வகை நெல்லுக்கு, 1,080 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் வேளாண் பருவத்தில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, வேளாண் துறை பரிந் துரைப்படி உயர்த்தினால், அது, உணவு மானியச் சுமையில், ஒட்டுமொத்த அளவில், கூடுதலாக,15 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்து விடும்.
கூடுதல் செலவு:மத்திய அரசு, நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், உணவு மானியத்திற்கு, 75 ஆயி ரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த் தினால், அது, அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் என, உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)