ஆந்திராவில் பெட்ரோல் விலை குறைகிறதுஆந்திராவில் பெட்ரோல் விலை குறைகிறது ... பார்வையற்றவர்களுக்காக பேசும் ஏடிஎம் மெஷின் பார்வையற்றவர்களுக்காக பேசும் ஏடிஎம் மெஷின் ...
போக்குவரத்து ஊழியர்களுக்கு 7 சதவிகித அகவிலைப்படி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2012
10:42

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப் படியை, ஏழு சதவிகிதம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்: மாநிலத்தில் உள்ள எட்டு போக்குவரத்துக் கழக அலுவலர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, கடந்த ஜனவரி மாதம் முதல், அகவிலைப் படியை, 58 சதவீதத்திலிருந்து, 62 சதவீதமாக உயர்த்தி, உத்தரவிடுகிறேன். இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, போக்குவரத்துக் கழகங்களிலிருந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும், குடும்ப ஓய்வுதியம் பெறுபவர்களுக்கும் பொருந்தும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, நிலுவை இல்லாமல் ரொக்கமாக, கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும். இதனல், போக்குவரத்துக் கழகங்களுக்கு, மாதத்துக்கு கூடுதலாக, 10 கோடியே 55 லட்ச ரூபாய் செலவாகும். அகவிலைப்படி உயர்வை, ஒரு லட்சத்து 19 ஆயிரம் தொழிலாளர்களும், 41 ஆயிரம் ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் பெறுகின்றனர். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)