பதிவு செய்த நாள்
08 ஜூன்2012
00:31
புதுடில்லி:சென்ற 1ம் தேதி வரையிலுமாக, மத்திய அரசு, அதன் கிடங்குகளில் வைத்துள்ள கோதுமை கையிருப்பு, 5.02 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, மத்திய அரசு, நிர்ணயித்திருந்த இலக்கை விட, 40 லட்சம் டன் அதிகமாகும்.இதேபோன்று, அரிசி கையிருப்பும், 3.21 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. மத்திய அரசு, 1.22 கோடி டன் அரிசியை கையிருப்பு வைத்திருக்கும் வகையில் இலக்கு நிர்ணயித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் கைவசம், 3.82 கோடி டன் கோதுமையும், 3.29 கோடி டன் அரிசியும் இருந்தது.கடந்த 2009ம் ஆண்டு முதல், மத்திய அரசு, மாதம் ஒன்றுக்கு, கூடுதலாக, 30 லட்சம் டன் கோதுமையையும், கூடுதலாக, 20 லட்சம் டன் அரிசியையும் கையிருப்பில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு @வளாண் பருவத்தில் நாட்டின் தானிய உற்பத்தி 25 @காடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தி அதிகரிப்பாலும், தானியங்களுக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலை உயர்வாலும் அரசின் தானியக் கொள்முதல் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|