பதிவு செய்த நாள்
08 ஜூன்2012
00:32
புதுடில்லி:மத்திய அரசு, வட்டார ஊரக வங்கிகளின் (ஆர்.ஆர்.பீ.,), மூலதன தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள, 632 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.உள்நாட்டில், 82 வட்டார ஊரக வங்கிகள் உள்ளன. இவற்றுள், 40 வங்கிகளின், நிதி நிலை வலுவிழந்துள்ளன. இவற்றின், நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் வகையில், மத்திய அரசு, 632 கோடி ரூபாய் வழங்க முக்கிய மத்திய மந்திரிகளின் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் டாக்டர் கே.சி.சக்ரபர்த்தியின் பரிந்துரைக்கு ஏற்ப, இந்த நிதிஉதவி வழங்கப்பட உள்ளது.ஊரக வங்கிகள், கிராமப்புற மேம்பாடு மற்றும் வேளாண் துறைக்கு, கடன் உதவி வழங்கி வருகின்றன. ஊரக வங்கிகளின் மொத்த மூலதனத்தில், மத்திய அரசு, 50 சதவீத அளவிற்கும், மாநிலங்கள், 15 சதவீத அளவிற்கும், ஊரக வங்கிகளின் பொறுப்பேற்பு வங்கிகள், 35 சதவீத அளவிற்கும் பங்களிப்பைக் கொண்டுள்ளன.
நடப்பு 2012ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலுமாக, பல மாநில அரசுகள், அவற்றின் பங்களிப்பை அளிக்காத நிலையிலும், 16 ஊரக வங்கிகளுக்கு மத்திய அரசு, பங்கு மூலதனம் வழங்கியுள்ளது.இருப்பினும், மாநில அரசுகள் மற்றும் பொறுப்பேற்பு வங்கிகள் நிதியுதவி அளிப்பதைப் பொறுத்தே பங்கு மூலதனம் வழங்கப்படும் என, மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|