பதிவு செய்த நாள்
14 ஜூன்2012
00:06
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் புதன் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இன்று வெளியிடப்பட உள்ள நாட்டின் பணவீக்கம் மற்றும் நாளை வெளிவரவுள்ள, நிறுவனங்கள் செலுத்தவுள்ள முன்கூட்டிய வரி போன்றவை எப்படி இருக்குமோ என்ற அச்சப்பாட்டால், பங்கு வர்த்தகத்தில் சுணக்க நிலை காணப்பட்டது.
இவை நன்கு இருக்கும் நிலையில், வர்த்தகம் சூடுபிடிக்க வாய்ப்புள்ளது என, மும்பை பங்குச் சந்தையின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.இந்நிலையில், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. இதனால், ஒட்டு மொத்த அளவில் வர்த்தகம் முடியும் போது குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர்பொருட்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது. இருப்பினும், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனத் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 17.71 புள்ளிகள் அதிகரித்து, 16,880.51 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 16,944.11 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,792.87 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 18 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 5.55 புள்ளிகள் உயர்ந்து, 5,121.45 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,144.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,095.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|