பதிவு செய்த நாள்
14 ஜூன்2012
14:39
ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் நகரம், ஒரு தொழில் நகரமாக உருவெடுத்து வருகிறது. தலைநகர் டில்லிக்கு மிக அருகில், இந்த நகரம் அமைந்திருப்பது கூடுதல் விசேஷம். இதன் காரணமாகவே, இந்த நகரம் கூடுதல் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஆனால், இந்த நகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, கடந்த ஆண்டு "பிங்க் ஆட்டோ' என்ற பெயரில், பெண் டிரைவர்கள் கொண்ட சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு அடுத்த கட்டமாக, தற்போது பெண் டிரைவர்கள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்ரா குழுமத்தை சேர்ந்த, "ஜிகேப்ஸ்' என்ற வாடகை டாக்ஸி நிறுவனம் இந்த சேவையை துவக்கியுள்ளது. 125 கார்கள் மற்றும் 35 பெண் டிரைவர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பெண் வாடிக்கையாளர்களுக்கு என்றே இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது. வாடகை காரில், பாதுகாப்புக்காக, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. கார் எங்கு உள்ளது என்பதை, இணைய தளத்தின் மூலம் உடனே அறிந்து கொள்ள முடியும். பெண் டிரைவர்களுக்கு, சாலை பாதுகாப்பு, சுய பாதுகாப்பு, நடத்தை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விரிவான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளிலும், இது போன்ற சேவையை விரிவுப்படுத்தினால், தனியாக பயணிக்கும் பெண்கள் அச்சப்பட தேவையில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|